உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வணிக நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களான விவசாயி களின் முக்கிய கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ள னர். அதன்படி ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் விவசாயி களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இதில், 17 ஆயிரம் குடும்பங்கள் பய னடையும்.
கிரேட்டர் நொய்டா வளர்ச்சி ஆணையக் கூட்டத்தில் வீட்டு வச திக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 10 சதவிகித நிலத்தை விவ சாயிகளுக்கு வழங்க முடிவு செய் யப்பட்டது. நிலத்தை இழந்த குடும் பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வளர்ச்சி ஆணையத்திடம் உள்ள வணிக நிறுவனங்களில் 33 சத விகித இடஒதுக்கீடு வழங்கப்படும். அகில இந்திய விவசாயிகள் சங்கம் தலைமையில் ஆணையத்தின் தலைமையகம் முன்பு துவக்கப் பட்ட காலவரையற்ற தர்ணா, விவ சாயிகள் நடத்திய போராட்டத் துக்கு வலு சேர்த்தது.
பாதகமான காலநிலை மற்றும் கைதுகளை மீறி 124 நாட்கள் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. ஜூன் மாத இறுதியில் யோகி ஆதித்ய நாத் அரசு விவசாயிகளின் போராட் டத்திற்கு பணிந்தது. கோரிக்கை களை ஏற்று அரசு அதிகாரிகள் ஒப் பந்தத்தை ஏற்படுத்தினர். கைது செய்யப்பட்ட 33 விவசாயிகள் சங்க தலைவர்களும் விடுவிக்கப்பட்ட னர். ஆனாலும் ஒப்பந்தத்தை அமல் படுத்த பாஜக அரசு முன்வில்லை. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விவசாயிகளின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும் என அஞ்சிய அரசு தற்போது இந்த முடிவை அங்கீகரித்துள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் விஜு கிருஷ் ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவுகளை அமல்படுத்தாவிட்டால், கடுமை யான போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.